'கூல்' கனடாவில் 120 டிகிரியை தாண்டிய வெப்பம்.. 500 பேர் பலி.. என்ன காரணம்? மற்ற நாடுகளில் ஏற்படுமா
ஒட்டாவா: கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 120 டிகிரியை எட்டியுள்ள நிலையில், இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.
பருவநிலை மாற்றம் என்பது உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. இதனால் பருவம் தவறிப் பெய்யும் மழை, அதிகரிக்கும் வெப்பம் ஆகியவற்றால் விவசாயிகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கனடாவில் சில பகுதிகளில் வெப்ப அலை காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

கனடா வெப்பம்
உலகில் குளிர்ச்சியான நாடுகளில் ஒன்று கனடா அங்குச் சராசரி வெப்பநிலையே 70 டிகிரி பாரன்ஹீட் தான். கோடைக் காலங்களில் கூட அதிகபட்சமாக 90 டிகிரி வரை தான் அங்கு வெப்பம் செல்லும். இது நம் ஊர்களில் வழக்கமாக இருக்கும் வெப்பநிலை. ஆனால், கடந்த ஒரு வாரமாகக் கனடாவில் வெப்ப நிலை திடீரென முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

500 பேர் பலி
கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அதிகபட்சமாக 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு வரை இந்தளவு வெப்பத்தைக் கண்டிராத கனடா மக்கள் இதனால் கடும் துயரத்தை எதிர்கொண்டுள்ளனர். திடீரென அதிகரித்த வெப்பத்தால் சுமார் 500 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

குறையாது
அடுத்தும் வரும் நாட்களில் வெப்பநிலை குறைய வாய்ப்பில்லை என்றே கனடா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு உயிரிழப்புகளும் வரும் காலங்களில் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கனடா நாட்டில் இதற்கு முன்பு வரை 1937ஆம் ஆண்டு பதிவான 113 பாரன்ஹீட் வெப்பமே அதிகமாக இருந்தது.

ஹோட்டல்கள்
வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் ஏசி அறைகளில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெப்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீடுகளில் ஏசி வசதி இல்லாத மக்கள் ஹோட்டல்களை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.

மின் தேவை
மேலும், அங்குள்ள அனைத்து கடைகளிலும் ஏசிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. சிறிய குளிர்சாதன கருவிகளின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மின் தேவையும் கனடா நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் மின் இணைப்பில் ஏதேனும் சிறிய சிக்கல் ஏற்பட்டால் கூட அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏன் ஏற்படுகிறது
வலுவான, உயர் அழுத்த வளிமண்டலம் சூடான கடல் காற்றைப் பிடிக்கும்போது ஒரு குவிமாடம் (heat dome) போன்ற ஒன்று ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் வெப்பம் பல மடங்கு அதிகரிக்கிறது கடலின் வெப்ப நிலை அதிகரிப்பதும் இதற்கு முக்கிய காரணம். இந்த நிகழ்வு காரணமாகவே கனடாவில் வெப்பநிலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தற்போது இவை ஏற்படுவது அதிகரித்துள்ளது. உலகின் மற்ற பகுதிகளில் இதுவரை heat domeஆல் வெப்பநிலை இந்தளவு அதிகரித்ததில்லை.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications