Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்றுடன் முடிவடையும் போர் நிறுத்தம்.. ஹமாஸ் எடுக்கும் முக்கிய மூவ்! போர் நிறுத்தம் நிரந்தரமாகுமா?

Subscribe to Oneindia Tamil

காசா: ஹமாஸ் வசம் இருக்கும் பணய கைதிகளும், இஸ்ரேல் வசம் இருக்கும் பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்பந்தம் போட்ட நிலையில், இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தொடர் முயற்சிகளை செய்து வருகிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உலக நாடுகள் எவ்வளவோ முயன்றாலும் தற்போது வரை இங்கு நிரந்தர அமைதி சாத்தியமாகவில்லை. குறிப்பாக ஐநா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகள் சொன்ன 'சுதந்திர பாலஸ்தீனம்' எனும் அறிவுரையை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் இருக்கின்றன. இதுதான் தற்போதைய மோதலுக்கும் காரணமாக இருக்கிறது.

As the cease-fire in Palestine ends today, Hamas attempts to extend the cease-fire further

தொடர் மோதல் போக்கின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 7ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், திடீர் ராக்கெட் தாக்குதலை தொடுத்தது. மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சிலரை பணைய கைதிகளாக பிடித்து சென்றது. இதற்கு பதிலடியாக ஏறத்தாழ 50 நாட்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் 6,150 குழந்தைகள் உட்பட 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 38 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தையை உலக நாடுகள் தீவிரப்படுத்தின. கத்தார் இந்த பேச்சுவார்த்தையை தலைமையேற்று நடத்தியது. ஐநா சபையில் சீனாவும், ரஷ்யாவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலை எழுப்பின. பின்னர் ஒரு வழியாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமானது. இஸ்ரேலும், ஹமாஸ் படையும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை/சிறை கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டன.

கடந்த இரண்டு நாட்களாக சில கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்பட வேண்டும் என அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் நிரந்தரமாக போரை நிறுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இரண்டாம் உலகப்போரில் தப்பிய யூதர்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் வரும்போது தங்க இடம் கொடுத்தது பாலஸ்தீனம்தான். ஆனால் தங்களுக்கான நாட்டை உருவாக்கிக்கொள்ள பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அதற்கு இஸ்ரேல் என பெயரிட்டுக்கொண்டனர் யூதர்கள். தற்போது பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என்பதுதான் இஸ்ரேலின் நிலைப்பாடு. எனவே காசா மீதான தாக்குதல் மேலும் தொடரத்தான் செய்யும் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழலை எதிர்கொள்ள ஹமாஸ் படையினர் சில யுக்திகளை யோசித்துள்ளனர். அதாவது தங்கள் வசம் இருக்கும் இஸ்ரேலிய பணய கைதிகளை கூடுதலாக விடுவிப்பதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இன்றுடன் 4 நாட்கள் போர் நிறுத்தம் முடிவடைவதால், இரண்டாம் கட்டமாக 40-50 பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் மேலும் 4 நாட்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் முயற்சிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+