இன்றுடன் முடிவடையும் போர் நிறுத்தம்.. ஹமாஸ் எடுக்கும் முக்கிய மூவ்! போர் நிறுத்தம் நிரந்தரமாகுமா?
காசா: ஹமாஸ் வசம் இருக்கும் பணய கைதிகளும், இஸ்ரேல் வசம் இருக்கும் பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்பந்தம் போட்ட நிலையில், இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை நீடிக்க ஹமாஸ் தொடர் முயற்சிகளை செய்து வருகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உலக நாடுகள் எவ்வளவோ முயன்றாலும் தற்போது வரை இங்கு நிரந்தர அமைதி சாத்தியமாகவில்லை. குறிப்பாக ஐநா மற்றும் உலகின் பெரும்பாலான நாடுகள் சொன்ன 'சுதந்திர பாலஸ்தீனம்' எனும் அறிவுரையை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள் இருக்கின்றன. இதுதான் தற்போதைய மோதலுக்கும் காரணமாக இருக்கிறது.

தொடர் மோதல் போக்கின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 7ம் தேதியன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், திடீர் ராக்கெட் தாக்குதலை தொடுத்தது. மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சிலரை பணைய கைதிகளாக பிடித்து சென்றது. இதற்கு பதிலடியாக ஏறத்தாழ 50 நாட்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தியது. இதில் 6,150 குழந்தைகள் உட்பட 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 38 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தையை உலக நாடுகள் தீவிரப்படுத்தின. கத்தார் இந்த பேச்சுவார்த்தையை தலைமையேற்று நடத்தியது. ஐநா சபையில் சீனாவும், ரஷ்யாவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரலை எழுப்பின. பின்னர் ஒரு வழியாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமானது. இஸ்ரேலும், ஹமாஸ் படையும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை/சிறை கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டன.
கடந்த இரண்டு நாட்களாக சில கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் போர் நிறுத்தம் நிரந்தரமாக ஏற்பட வேண்டும் என அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் நிரந்தரமாக போரை நிறுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இரண்டாம் உலகப்போரில் தப்பிய யூதர்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் வரும்போது தங்க இடம் கொடுத்தது பாலஸ்தீனம்தான். ஆனால் தங்களுக்கான நாட்டை உருவாக்கிக்கொள்ள பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அதற்கு இஸ்ரேல் என பெயரிட்டுக்கொண்டனர் யூதர்கள். தற்போது பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என்பதுதான் இஸ்ரேலின் நிலைப்பாடு. எனவே காசா மீதான தாக்குதல் மேலும் தொடரத்தான் செய்யும் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழலை எதிர்கொள்ள ஹமாஸ் படையினர் சில யுக்திகளை யோசித்துள்ளனர். அதாவது தங்கள் வசம் இருக்கும் இஸ்ரேலிய பணய கைதிகளை கூடுதலாக விடுவிப்பதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இன்றுடன் 4 நாட்கள் போர் நிறுத்தம் முடிவடைவதால், இரண்டாம் கட்டமாக 40-50 பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் மேலும் 4 நாட்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் முயற்சிக்கிறது.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications