Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஹமாஸ் பலமுனை தாக்குதல்.. மேயர் உட்பட 40 இஸ்ரேலியர்கள் பலி!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ், காசா பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை பல முனைகளிலும் சரமாரியாக ஏவியதில், மேயர் உள்பட 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் காசாவில் 198 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இருதரப்பிலும் ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுக்கள் இன்று ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர். முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை வீசியதாக ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்கு எதிராக போரை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ள அந்த அமைப்பினர், தங்களது நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அல் அக்சா ஃப்ளட்' என பெயர் சூட்டியுள்ளனர்.

At least 22 Israelis killed including mayor as Hamas launches multi-front attack

இஸ்ரேல் நாட்டின் நேரப்படி காலை 6.30 மணியளவில் தரை வழியாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் என பல முனைகளில் இஸ்ரேலுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலில், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் ஓபிர் லிப்ஸ்டீனும் கொல்லப்பட்டுள்ளார். ஐநூறுக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பல முனைகளிலும் இருந்து வந்த ராக்கெட் தாக்குதலால், ஏராளமான கட்டடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. ராக்கெட் வீச்சால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்களை, ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பல முனைகளிலும் இருந்து வந்த ராக்கெட் தாக்குதலால், ஏராளமான கட்டடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. ராக்கெட் வீச்சால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்களை, ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்டெரோட் நகரில் பாலஸ்தீன போராளிகள் வழிப்போக்கர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சமூக ஊடகங்களில் பரவிய காட்சிகள் சீருடையில் பாலஸ்தீனியர்கள் எல்லைப் பகுதியில் மோதலில் ஈடுபட்டதைக் காட்டுகின்றன. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

At least 22 Israelis killed including mayor as Hamas launches multi-front attack

மேலும் இஸ்ரேலும் தற்போது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. காசா பகுதியில் ஹமாஸ் தீவிராதிகள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல்களில் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். காசா பகுதியில் 198 பேர் வரை பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருதரப்பிலும் தற்போது ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+