பிரான்ஸ்: மக்கள் கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து பயங்கர தாக்குதல்- 80 பேர் பலி!
நைஸ்: பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வெடிபொருட்கள் நிரம்பிய டிரக் ஒன்று வெடித்து சிதறியத்தில் 80 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ்சில் தொடர்ச்சியாக ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது.
நைஸ் நகரில் இந்த வாண வேடிக்கையைக் காண நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது வெடிபொருட்களுடன் வந்த டிரக் ஒன்று மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்து பயங்கரமாக வெடித்தது.

இத்தாக்குதலில் 80 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸில் மேலும் 3 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும் என்று அதிபர் ஹோலண்டே அறிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications