"பல்வேறு நிறுவனங்களில் குழந்தை வன்கொடுமை நிகழ்ந்ததுள்ளது"- வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய ஆணையம்
ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து நடத்தப்பட்ட ஐந்தாண்டு விசாரணை முடிந்து வெளியிடப்பட்டுள்ள இறுதி அறிக்கையில் 400-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு கழகங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமை நடந்ததிற்கான ஆதாரங்களை அந்நாட்டு அரசு ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டிலிருந்து, இது தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரணைக்காக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து அரசு ஆணையம் கேட்டறிந்ததில், 4000 நிறுவனங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சட்டம் இயற்றுபவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பரந்த அளவிலான திட்டங்களை உள்ளடக்கிய 17 பாகங்கள் கொண்ட இறுதி அறிக்கை வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.
"ஆஸ்திரேலிய நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். சரியான எண்ணிக்கை நமக்கு தெரியவே வராது" என்று இந்த அறிக்கை கூறியுள்ளது.
"சமூகத்தின் முக்கிய அமைப்புகள் தீவிரமான தோல்வி அடைந்துள்ளன" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத குருக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மீது பொதுவாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
கத்தோலிக்க நிறுவனங்களில் மிக அதிக அளவிலான குழந்தை வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- “மீனின் மதிப்பு கூட மீனவனுக்கு இல்லை”
- 40 குழந்தைகள் மீதான வல்லுறவு: காங்கோவின் ஆயுதக் குழுவினருக்கு சிறை
- "ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர்"
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications