அடுப்பு இல்லை..நெருப்பு இல்லை.. காருக்குள்ளேயே பன்றி கறி சமைத்து அசத்திய இளைஞர்
பெர்த்: ஆஸ்திரேலியாவில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் காரில் எந்த அடுப்பும் இல்லாமல் சும்மாவே தனது காரின் இருக்கையில் 1.5 கிலோ பன்றி இறைச்சியை 10 மணி நேரம் வைத்து சமைத்துள்ளார். அதன் முடிவு அவருக்கு ஆச்சர்யம் அளித்திருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது.100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டு பெங்கெல்லி, ஒரு வெப்பமான நாளில் தனது காரில் பன்றி இறைச்சியை வெற்றிகரமாக சமைத்து, தனது 'வேடிக்கைக்கான பரிசோதனை' என்ற பெயரில் தனது பேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பயங்கர வைரலாகி வருகிறது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியைச் சேர்ந்த அவர், தனது சிவப்பு டாட்சன் சன்னி கார் இருக்கையில் பெங்கெல்லி என்ற பன்றியின் இறைச்சியை ஒரு பேக்கிங் டின்னில் சுமார் 10 மணி நேரம் வைத்திருந்தார்.

விருந்து
"இது தனது விருந்தாக அமைந்துள்ளது!" என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமைத்த இறைச்சியையும் அதன் துண்டுகளை நிரூபிக்க துண்டுகளாக வெட்டப்பட்ட படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

39 டிகிரி வெப்பம்
அந்த பதிவில் அவர் கூறிருந்ததாவது: நேற்றைய எனது வேடிக்கையான என் பரிசோதனையைத் தவறவிட்டவர்களுக்காக இந்த பதிவு , ஒரு பழைய டாட்சன் சன்னிக்குள் 1,5 கிலோ பன்றி இறைச்சியை 39 டிகிரி வெப்பம் கொளுத்திய நாளில் 10 மணிநேரத்தில் நான் சமைக்க முற்பட்டேன். இது ஒரு விருந்தாக எனக்கு அமைந்தது.

மேற்கூறையில் துவாரம்
எனது காரின் இருக்கையில் பேக்கிங் டின்னில் அடைக்கப்பட்ட பன்றி கறியை வைத்தேன். அதன்பிறகு காரின் ஜன்னல் மற்றும் கதவு என நான் அனைத்தையும் மூடினேன். சூரிய ஒளி உள்ளபோகும் படி காரின் மேற்கூரையில் சிறிய துவாரம் ஏற்படுத்தினேன். அப்படியே வீட்டில் இருந்தபடியே மணிநேர வெப்பநிலையை கண்காணித்து வந்தேன்.

177 டிகிரி பாரன்ஹீட்
காலை 7 மணிக்கு 30 டிகிரியாக இருந்த வெப்பம், காலை 10 மணி 52 டிகிரியாக அதிகரித்தது. மதியம் 1 மணி வரை வெப்பநிலை உள்ளே 81 டிகிரியாக (177 டிகிரி பாரன்ஹீட்டாக) அதிகரித்தது. இது பழைய வாகனம் என்பதுடன் கருப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தால், வெப்பநிலை கணிசமாக உயர்ந்தது. கடைசியில் எனக்கு அது விருந்தாக அமைந்தது.

குழந்தையை விடாதீர்
என் எச்சரிக்கை என்னவென்றால், யாரையும் அல்லது உங்களுக்கு விலைமதிப்பற்ற எதையும் மூடப்பட்ட சூடான காரில் விடாதீர்கள், ஒரு நிமிடம் கூட விடாதீர்கள்.. குழந்தைகள் அல்லது நாய்களை ஒரு சூடான காரில் பார்த்தால், விரைவில் வெளியேற்ற அதன் கண்ணாடியை இறக்குவதற்கு தயங்க வேண்டாம். இதைச் செய்வது குற்றமல்ல, நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மாட்டுக்கறி
அவரது பதிவினை பார்த்து வியந்த ஆஸ்திரேலிய மக்கள் அடுத்த விருந்து எப்போது என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளித்த பெங்கெல்லி அடுத்த முறை மாட்டுக்கறி சமைக்க உள்ளதாவும் அதை இரண்டு மணி நேரத்தில் சமைத்திடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications