இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்.. ஆஸ்திரேலியாவுக்கு சென்று படிப்பது.. இனி சிரமம்தான்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில், முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கிறது. இந்நிலையில், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து கல்வி பயில்வதில் கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்திருக்கிறது. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில், படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவர்கள்? என்பதை அளவீடு செய்வதுதான் 'மாணவர் விசா மதிப்பீடு' என்று சொல்லப்படுகிறது. இந்த மதிப்பீட்டில் மொத்தம் 3 நிலைகள் இருக்கின்றன.

- AL1 - குறைந்த ஆபத்து
- AL2 - மிதமான ஆபத்து
- AL3 - மிகுந்த ஆபத்து
என்ன பிரச்சனை?
இந்த நிலையின் கீழ் உள்ள நாடுகளிலிருந்து, மாணவர்கள் கல்வி பயில ஆஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள் என்றால், அவர்கள் மிக குறைந்த ஆவணங்களை சமர்ப்பித்தாலே போதும். விசா எளிதில் கிடைத்துவிடும். அதேபோல AL2 - மிதமான ஆபத்து நிலையில் உள்ள நாடுகளில் இருந்து மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விரும்புகிறார்கள் எனில், ஓரளவு தேவையான ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்தால் போதும்.
AL2 நாடுகளிலிருந்து விண்ணப்பித்தால்
இப்படி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில், 75% 29 நாட்களிலும், 48 நாட்களில் 90% விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். மட்டுமல்லாது இந்நாடு மாணவர்களின் விண்ணப்பங்கள் பெரும்பாலும் கணினி மூலமாகவே சரிபார்க்கப்பட்டு விசா வழங்கப்படும். ஏதேனும் சிறு ஆவணங்கள் விடுபட்டிருந்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாமல், ஆவணங்களை சேர்க்க அறிவுறுத்தப்படும். இந்தியா இந்த கேட்டகிரியில்தான் நீண்ட காலமாக இருந்தது.
AL3 நாடுகளிலிருந்து விண்ணப்பித்தால்
ஆனால், AL3 லிஸ்ட்டில் உள்ள நாடுகளிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எளிதில் விசா கிடைக்காது. இந்த லிஸ்ட்டில்தான் தற்போது இந்தியாவின் பெயர் சேர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் படித்திருக்கிறீர்கள், மேற்படிப்புக்காக ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கிறீர்கள் எனில், இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மேனுவலாக பரிசோதனை செய்யப்படும். அந்நாட்டின் அதிகாரிகள் நேரடியாக நீங்கள் படித்த பள்ளிகளுக்கு போன் செய்து விசாரிப்பார்கள். மட்டுமல்லாது அனைத்து ஆவணங்களையும் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய மாணவர்களுக்கு சிக்கல்
அதேபோல ஆஸ்திரேலியாவில் தங்கி பயிலும் ஒரு மாணவருக்கு தோராயமாக ரூ.16.5 லட்சம் செலவாகும். இது தவிர படிப்பு செலவு மற்றும் பயண செலவுகளும் இருக்கின்றன. திடீரென்று மாணவரின் வங்கி கணக்கில் இவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தாலும் விசா நிராகரிக்கப்படும். குறைந்தது 3-6 மாதங்கள் இந்த பணம் அவரது வங்கி கணக்கில் இருந்திருக்க வேண்டும்.
கால தாமதம்
AL2 லிஸ்ட்டில் உள்ள நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறீர்கள் எனில், நீங்கள் ஆங்கில வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதற்கான பள்ளி சான்றிதழ் கொடுத்தால் போதுமானது. ஆனால், AL3 லிஸ்ட்டில் உள்ள நாடுகளில் இருந்து விண்ணப்பிக்கிறீர்கள் எனில், IELTS (6.0) PTE (50)போன்ற ஆங்கில புலமைக்கான சான்றிதழை காட்ட வேண்டும்.
மட்டுமல்லாது இந்த விண்ணப்பங்களை சரிபார்க்க 8-12 வாரங்கள் வரை ஆகலாம். மட்டுமல்லாது இந்த நாடுகளில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வயது வரம்பு குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா ஏன் இதில் சேர்க்கப்பட்டது
கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து சென்ற மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் இணைத்திருந்த வங்கி கணக்கு எண், கல்வி சான்றிதழ் ஆகியவை போலியானவை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. கேரளாவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு 22 பல்கலைக்கழகங்களின் பெயரில் போலி சான்றிதழ்களை வழங்கிய ஒரு கும்பலை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த விஷயம், இந்தியாவை AL2 லிஸ்டில் சேர்க்க முக்கிய காரணமாகும்.
ஆஸ்திரேலியாவிலும் கட்டுப்பாடுகள்
ஏற்கெனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் விசா கட்டுப்பாடுகள் கடினமாக்கப்பட்டிருக்கின்றன. எனவே இங்கு விசா கிடைக்காதவர்கள், ஆஸ்திரேலியாவில் கல்வி பயில முயன்றனர். இப்படி இருக்கையில்தான் தற்போது ஆஸ்திரேலியாவிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் ஜன.8 முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.
-
வீட்டை விட்டு வெளியேற தடை.. ஜன்னல் பக்கம் போகாதீங்க.. கத்தார் வாழ் இந்தியர்களுக்கு பறந்த வார்னிங் -
கண்ட்ரோலை எடுக்கும் பாஜக! ஒரு காலத்தில் பீகாரில் மோடியை.. கால் வைக்க விடாத நிதிஷுக்கு நேர்ந்த கதி! -
இந்தியா டூ ஈரான்.. புறப்பட்ட ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்.. பின்னணி -
வம்பை விலைக்கு வாங்கிய சஞ்சு சாம்சன்.. அரையிறுதியில் விளையாட தடையா? போச்சு பெரிய சிக்கல் -
இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் - பதற்றம் -
இந்திய போர்க்கப்பல்களும் என்ட்ரி.. மத்திய கிழக்கில் வலம் வருவது ஏன்? உக்கிரமாகும் ஈரான் போர் -
"இந்தியா எங்களை தாக்க போகுது! இன்னொரு போருக்கு ரெடியாகிறது.." கதறிய பாகிஸ்தான் அதிபர்! என்ன மேட்டர்? -
உலக நாடுகளிலேயே இந்தியா தான் மிக மோசமாக பாதிக்கப்படும்.. ஈரான் vs அமெரிக்காவால் இக்கட்டான நிலை -
அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள்.. ஈரான் போரால் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு -
போரில் ஈரானை கைவிட்ட இந்தியா.. இஸ்ரேல் - அமெரிக்காவின் பக்கம் சாய்ந்த மோடி? இதை கவனிச்சீங்களா -
கியாஸ் தட்டுப்பாடு வந்திடுச்சி.. இந்தியாவுக்குபுது தலைவலி.. ஈரானால் கைவிரித்த கத்தார்! சிக்கல் -
இந்தியாவுக்கு ரூ.18,000 கோடி நஷ்டம்! கச்சா எண்ணெய் ஒரே ஒரு டாலர் உயர்ந்தாலும் மிக மோசமான பாதிப்பு!












Click it and Unblock the Notifications