ஆஸ்திரேலிய “புளூ” மலைகளில் பற்றி எரியும் தீ- 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குவிப்பு
Subscribe to Oneindia Tamil
கேன்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் புளூ மலைப்பகுதிகளில் அமைந்துள்ள புதர்களில் தீப்பிடித்தது. அங்கே, அதிவேகமாக காற்று வீசுவதால் தீ தொடர்ந்து பரவி வருகிறது. பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் வேலையில் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒழுங்கான சாலைகள் இல்லாத பாதைகளாக இருப்பதால், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதனால், தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்த தீ விபத்து மேலும் பரவினால் அந்த பகுதியில் அமைந்துள்ள 20 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 க்கும் அதிகமான வீடுகள் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications