குடிபோதையில் 9 ‘பப்பிக்களை’ அடித்துக் கொன்ற நபருக்கு 18 மாதம் சிறை
Subscribe to Oneindia Tamil
சிட்னி : ஆஸ்திரேலியாவில் குடி போதையில் ஒன்பது நாய்க்குட்டிகளை அடித்துக் கொன்ற நபருக்கு 18 மாதம் சிறை தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியை சேர்ந்தவர் நாதன் தாம்ப்சன் (25). சம்பவத்தன்று குடிபோதையில் இருந்தார் நாதன். அப்போது அவர் 9 நாய்க்குட்டிகளை தடியாலும், செங்கற்களாலும் கொடூரமாக அடித்து கொலை செய்தார்.
இது தொடர்பாக அக்கம்பக்கத்தார் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து நாதன் மீது மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாதன் கைது செய்யப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் குற்றவாளி என அறிவித்ததுடன் 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications