பார்சலில் குழந்தைகளின் உடல் உறுப்புகள்- விமான நிலையத்தில் பரபரப்பு
பாங்காக்: தாய்லாந்திலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட இருந்த விமான பார்சலில் குழந்தைகளின் உடல் உறுப்புகள் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள முகவரி ஒன்றிற்கு விமானம் வாயிலாக தாய்லாந்திலிருந்து பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப் பட இருந்தது. சம்பந்தப்பட்ட பார்சல் மீது பாங்காக் விமான நிலைய சோதனை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, அதில் எழுதப் பட்டிருந்த முகவரிக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், அவை போலியான முகவரி என விசாரணையில் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த பார்சலை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவற்றில் சிறு குழந்தைகளின் தலை, பாதங்கள், தோல் ஆகியவை இருந்தது.
அதனைத் தொடர்ந்து அப்பார்சலை கைப்பற்றிய போலீசார் தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பார்சலில் இருந்த உடல் உறுப்புகள் நிச்சயமாக ஒரே குழந்தையினுடையதாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ள போலீசார், இந்த பார்சலை யார், யாருக்கு அனுப்பியது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications