துருக்கி நோக்கி கடலில் மிதந்து வந்த 10 மாதக் குழந்தை.. பத்திரமாக மீட்பு
அங்காரா: மிதக்கும் பொருளில் படுத்தபடி கடலில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மிதந்து வந்த 10 மாதக் குழந்தையை துருக்கி கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
துருக்கி நாட்டில் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஏகியன் கடற்கரைப் பகுதியில் இருந்து 10 மாதக் குழந்தை ஒன்று கடலில் மிதக்கும் மிதவையில் படுத்தவாறே பெற்றோரை பிரிந்து சென்று விட்டது.

சுமார் அரை மைல் தூரம் கடலில் மிதந்து வந்த அந்தக் குழந்தையை, துருக்கி நாட்டு கடற்படையினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விரைந்து சென்ற மீட்புப் படையினர் அக்குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். அந்தக் குழந்தையின் பெயர் மெல்டா இல்கின்.
கடலில் குழந்தை மிதந்து வருவது போலவும், அதனை மீட்புப் படையினர் விரைந்து வந்து காப்பாற்றுவது போலவும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால், சில
ஊடகங்கள் அக்குழந்தையை அவரது தாயாரே நீரில் மிதக்க விட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications