பாகிஸ்தான் வழியாக இந்தியாவை சூழும் சீனா! ஷெரீப் உடன் கைகோர்க்கும் ஜி ஜின்பிங்? பலூச் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானும் சீனாவும் கடந்த பல ஆண்டுகளாகவே நெருங்கி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சீக்கிரமே பாகிஸ்தானில் சீன ராணுவமே கூட களமிறங்கக்கூடும் என்று எச்சரிக்கை வந்துள்ளது. அப்படி நடந்தால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து சுதந்திரம் பெற விரும்பும் போராளிகள் தான் பலூச் போராளிகள். பாகிஸ்தானுக்கும் பலுசிஸ்தானுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் பலுசிஸ்தான் தனி நாடும் என்றும் சொல்லி பலூச் போராளிகள் போராடி வருகிறார்கள். அவர்களைச் சமாளிப்பதை பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது.

பலூச் விவகாரம்
ஏற்கனவே, பாகிஸ்தான் பொருளாதாரச் சிக்கல் தொடங்கிப் பல பிரச்சினைகளால் தள்ளாடி வரும் நிலையில், பலூச் விவகாரமும் பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. இதற்கிடையே பலூச் பிரச்சினையைப் போக்க பாகிஸ்தானில் சீன ராணுவம் இறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இது தொடர்பாக பலூச் பிரதிநிதி மிர் யார் பலோச் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அடுத்த சில மாதங்களில் பலுசிஸ்தானில் சீனா தனது ராணுவப் படைகளைக் களமிறக்கும் என்று எச்சரித்துள்ளார். இது பலூச் பிராந்திய மக்களுக்கும் இந்தியாவிற்கும் தீவிரமான மற்றும் உடனடி அச்சுறுத்தலாக இருக்கும் என மிர் யார் எச்சரித்துள்ளார்.
அச்சுறுத்தல்
கடந்த ஜனவரி 1ம் தேதி எழுதப்பட்ட இந்த கடிதத்தில் பலூச் குடியரசின் பிரதிநிதியான மிர் யார் பலோச், பலுசிஸ்தானின் பாதுகாப்பைப் புறக்கணிக்கும் பாகிஸ்தான், சீக்கிரமே அங்குச் சீன படைகள் களமிறங்க அனுமதிக்கக்கூடும். இது பலுசிஸ்தானுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் கூட கற்பனை செய்ய முடியாத அச்சுறுத்தல் என்று அவர் கூறியுள்ளார்.
சீன படைகள்
அந்தக் கடிதத்தில் மேலும், "பலுசிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் வலுப்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டால், சீனா சில மாதங்களுக்குள் படைகளை நிறுத்தக்கூடும்.. 60 மில்லியன் பலூச் மக்களின் விருப்பமின்றி பலுசிஸ்தான் மண்ணில் சீனப் படைகள் களமிறக்கப்படும். சீனா படைகளின் இருப்பு இந்தியாவுக்கும் பலுசிஸ்தானுக்கும் கற்பனை செய்ய முடியாத அச்சுறுத்தலை உருவாக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்தும் மிர் யார் பலோச் கவலை தெரிவித்தார். பாகிஸ்தான்- சீனா இணைந்து உருவாக்கும் இந்த CPEC "இறுதிக் கட்டங்களை" எட்டியுள்ளதாகவும், இது நிலைமையை மேலும் அபாயகரமாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இதனால் இந்தியாவுக்கும் பலுசிஸ்தானுக்கும் இடையே திட்டவட்டமான, பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என அவர் அழைப்பு விடுத்தார். இரு நாடுகளும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் உண்மையானவை என்றும் உடனடியாக அந்த அச்சுறுத்தல்கள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவுக்கும் பலுசிஸ்தானுக்கும் இடையே பல நூற்றாண்டுக்கால வரலாற்று, கலாச்சாரப் பிணைப்புகள் உள்ளன என்பதை மிர் யார் பலோச் எடுத்துரைத்தார். ஹிங்லாஜ் மாதா கோவில் (நானி மந்திர்) போன்ற புனிதத் தளங்கள் பகிரப்பட்ட பாரம்பரியத்தின் சின்னங்களாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராட்டு
இது மட்டுமின்றி பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது அனைவருக்கும் தெரியும். அதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதைக் குறிப்பிட்ட மிர் யார், இந்த நடவடிக்கைகளுக்காக இந்தியாவைப் பாராட்டினார். பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான முன்மாதிரியான தைரியத்தையும், அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் இச்செயல் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்..
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications