மோடிக்கு எதிராக பாக். பலுசிஸ்தான் மாகாண சட்டசபையில் கண்டன தீர்மானம்
இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண சட்டசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர தமது சுதந்திர தின உரையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

அதே நேரத்தில் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பலுசிஸ்தான் தனிநாடு கோரும் அமைப்புகள் மோடியின் உரைக்கு ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாண சட்டசபையில் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த முகமது கான் லெஹ்ரி கொண்டு வந்த தீர்மானம் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில் பலுசிஸ்தான் மாகாண முதல்வர் நவாப் சனாவுல்லா ஜெஹ்ரியும் கையெழுத்திட்டுள்ளார்.
மோடிக்கு எதிரான கண்டனத் தீர்மான விவரம்:
மோடியின் பலுசிஸ்தான் தொடர்பான பேச்சு, இம்மாகாணத்தில் பயங்கரவாத செயல்களை இந்தியா தூண்டிவிடுகிறது என்பதை நிரூபிக்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மையில் மோடி தலையிடுகிறார். இது தொடர்பான ஐநா சபை விதிகளை மோடி மீறுகிறார்.
சர்வதேசத்தின் பார்வையில் இருந்து காஷ்மீர் பிரச்சனையை திசைதிருப்பவே இப்படி மோடி பேசியுள்ளார்.
இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications