சுட்டெரித்த துபாய் வெயிலில்! வெறுங்காலில் 104 கி.மீ. தூரம் ஓடிய பெங்களூர் இளைஞர்! ஏன் என்னாச்சு?
ஷார்ஜா: பெங்களூரை சேர்ந்த 34 வயது இளைஞர் துபாயில் 104 கி.மீ. தூரம் வெறும் காலில் ஓடிய சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பூமி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது காலநிலை மாற்றம். இது குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்த பாதிப்பிலிருந்து மீள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் சர்வதேச காலநிலை மாற்ற நடவடிக்கை உச்சி மாநாடு கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கான நிதியுதவி மற்றும் பூமியிலிருந்து கிடைக்கும் எரி பொருட்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டது. COP 28 எனும் மாநாடு துபாயில் வசித்து வரும் பெங்களூர் இளைஞருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. உத்வேகமும் அடைந்தார். இதற்காக தானும் தனது பங்குக்கு மனித குலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார்.
இதற்காக அவர் மாரத்தான் பயணம் மேற்கொண்டார். அவர் நாம் நேரத்தை கடந்து விட்டோம் என்ற வாசகத்துடன் மாரத்தான் பயணம் மேற்கொண்டார். அல் குத்ராவில் உள்ள ஏரியிலிருந்து அதிகாலை தனது பயணத்தை தொடங்கினார் ஆகாஷ். இவர் அப்படியே பாம் ஜூமைரா, புர்ஜ் அல் அரப், கைட் கடற்கரை, ஜூமைரா கடற்கரை, எதிஹாத் மியூசியம் உள்ளிட்ட இடங்களை கடந்தார்.
இப்படியாக துபாயில் முக்கிய அடையாளங்கள் வழியாக வந்த அவர் அந்த நாட்டின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் தனது மாரத்தானை முடித்தார். இவர் செருப்பு அணியாமல் வெறுங்கால்களுடன் 17 மணி நேரம் 20 நிமிடங்களில் 104 கி.மீ. தூரத்தை கடந்தார்.
இதுகுறித்து ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: வானளாவிய கட்டடங்களின் நகரம் துபாய்க்குள் ஒரு 100 கிமீ. மாரத்தான். சூரிய உதயத்திற்கு பிறகு ஓட்டம் தொடங்கியது. காலநிலை மாற்ற பிரச்சினையை தீர்க்கவும், சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான் விரும்பியதாக தெரிவித்தார். இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
சுட்டெரித்த வெயிலில் இவர் 104 கி.மீ. தூரம் ஓடியது பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. துபாயை ஏன் தேர்வு செய்தார் என்பதையும் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். அதாவது சர்வதேச COP 28 மாநாடு துபாயில் முடிவடைந்தது. உலகம் 1.5 டிகிரி சென்டிகிரேட்டுக்கு வெப்பமயமாக இன்னும் 5 ஆண்டுகள்தான் இருக்கின்றன. ஆனால் யாருக்கும் அது குறித்து விழிப்புணர்வு இல்லை என தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications