தூதரக உறவு திருப்திகரமாக இல்லை: பாகிஸ்தானில் இருந்து தூதரை திரும்ப அழைத்தது வங்கதேசம்!!
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்காளதேசத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தூதரக உறவு திருப்திகரமாக இல்லை எனக் கூறி பாகிஸ்தானுக்கான தூதரை வங்கதேசம் திரும்ப அழைத்துள்ளது.
1971-ஆம் ஆண்டு நடந்த போர் தொடர்பாக விசாரணை, தீவிரவாத தொடர்பு காரணமாக பாகிஸ்தான் தனது தூதரை திரும்ப பெற்றது போன்ற பல காரணங்களால் பாகிஸ்தானுக்கான தூதரை இன்று வங்கதேசம் திரும்ப அழைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கான தூதர் சுக்ரப் ஹூசைனை மிக விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்று கூறியிருப்பதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தூதரின் பதவிக்கான ஒப்பந்தக்காலம் முடிய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் போராட்ட வீரரான ஹூசைன், ஒப்பந்த அடிப்படையில் 2010ம் ஆண்டு பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டார். அதன்பின்ன் இரண்டு முறை அவரது ஒப்பந்தக்காரம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications