வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பலி.. 100 பேர் படுகாயம்
டாக்கா: வங்கதேச தலைநகரம் டாக்காவில் ஜவுளி ஆலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பத்துபேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தலைநகர் டாக்காவில் காஷிபூர் என்ற இடத்தில் உள்ள ஜவுளி ஆலையில் 3 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். பணி முடிந்து மாலையில் பலர் வீடு திரும்பி விட்டனர். சிலர் மட்டுமே ‘ஓவர் டைம்' ஆக கூடுதல் நேரம் பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென தீ பிடித்தது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் கரும்புகை சூழ்ந்ததால் அவர்களால் உடனடியாக வெளியேற முடிய வில்லை.
எனவே தீயில் சிக்கி 10 பேர் உடல் கருகி இறந்தனர். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
டாக்காவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான ஆயத்த ஆடை நிறுவனங்ளும், ஜவுளி ஆலைகளும் உள்ளன. இங்கு ஆயிரக் கணக்கானவர்கள் பணிபுரிகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இங்குள்ள ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து கட்டிடமும் இடிந்தது. இந்த விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து கடந்த மே மாதம் மற்றொரு ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ பிடித்தது. இச்சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications