வங்கதேச கிளாமர் நடிகை கைது.. போலீஸின் அதிரடி ஆக்ஷனுக்கு காரணம் இதுவா!
டாக்கா: வங்கதேசத்தில் சமீபத்தில் அரசியல் சலசலப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் கிளாமர் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது விவாதமாகியிருக்கிறது.
சவுதி-வங்கதேச உறவில் எழுந்த சிக்கல்தான் இவரது கைதுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. நடிகையின் கைதுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேக்னா ஆலம் வங்க தேசத்தின் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். மாடலிங் துறையிலிருந்து நடிகையாக வந்த இவர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், பாலின சமத்துவ ஆதரவாளர், Miss Bangladesh Foundation அமைப்பின் தலைவர், சமூக மற்றும் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசும் நபர் என்றும் அறியப்படுகிறார். எனவே இயல்பாகவே இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இப்படி இருக்கையில்தான் இந்த கைது நடவடிக்கை நடந்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் 9ம் தேதி நள்ளிரவு இந்த கைது நடவடிக்கை நடந்திருக்கிறது. நள்ளிரவு டாக்காவில் உள்ள ஆலமின் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு புகுந்த போலீஸ், அவரை கைது செய்திருக்கிறது.
இந்த கைதுக்கு காரணம் சவுதி-வங்கதேச இடையேயான உறவுதான் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சவுதி தூதர் ஒருவருடன் இவர் காதலில் இருந்திருக்கிறார். ஆனால் தூதருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருக்கிறது. இந்த விஷயம் தெரிந்த பின்னர் ஆலம் உறவை முறித்துக்கொண்டிருக்கிறார். இது குறித்து தனது பேஸ்புக் பதிவில் விஷயத்தை தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான் விஷயம் சவுதி-வங்கதேசம் இடையேயான பிரச்சனையாக வெடித்தது.
சம்பந்தப்பட்ட தூதர் இது தொடர்பாக வங்கதேச அரசிடம் முறையீடு செய்திருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே ஆலமை போலீஸ் கைது செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு வங்கதேச மக்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ஒரு பெண் உண்மையை பேசினால் கைது செய்வீர்களா? கைது செய்ய என்ன உரிமை இருக்கிறது? இந்த கைது நடவடிக்கை சட்டரீதியானது கிடையாது என்று கொந்தளித்தனர். சோஷியல் மீடியாக்களில் இது கடும் விவாதமாக வெடித்தது. வங்கதேசத்தில் அமைந்திருப்பது புதிய அரசு. எனவே இந்த அரசின் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளவும், மக்களின் கோபத்தை கட்டுப்படுத்தவும், ஆலமை கைது செய்த அதிகாரியை அரசு சஸ்பெண்ட் செய்தது.
இருந்தாலும் மக்களின் கோபம் குறையவில்லை. அதேபோல, Prothom Alo, The Daily Star போன்ற வங்கதேச பத்திரிகைகளும் ஆலமின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. வங்கதேசத்தின் அரசின் சட்ட ஆலோசகர் பேராசிரியர் ஆசிப் நஸ்ரூல் உள்ளிட்டோர் ஆலமின் கைதுக்கு அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications