வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மகளுக்கு மீண்டும் பிடிவாரண்ட் - நீதிமன்றம் அதிரடி
ஹாக்கா: ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தில் வெடித்த மாணவர்கள் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. உடனடியாக நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேறிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் தந்தது. ஷேக் ஹசீனாவை மீண்டும் தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசு இதுவரை பதிலளிக்காமல் உள்ளது.

இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா மீது வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகள் சைமா உள்ளிட்ட 17 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. வங்காளதேச கோர்ட்டுகளில் ஷேக் ஹசீனாவுக்கு ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான புர்பாச்சலில் அரசு நிறுவனம் சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை மோசடியாக வாங்கியது தொடர்பாக ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக டாக்கா பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த ஊழல் தொடர்பாக அந்த நாட்டின் ஊழல் தடுப்பு கமிஷன் விசாரித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஷேக் ஹசீனாவின் மகளான சைமா, புதிய நகர வீட்டுவசதி திட்டத்தில் சட்ட விதிகளை மீறி வீட்டு மனையை பெற்றதாகவும் இதற்கு ஷேக் ஹசீனா தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
மேலும், வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிப்பீர் ரகுமானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்காக 4 ஆயிரம் கோடி ரூபாயை வீண் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றப் பத்திரிக்கை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை அறிக்கையை அடுத்த மாதம் மே 4 ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு ஊழல் தடுப்பு கமிஷனுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications