தடை செய்யப்பட்ட 'இந்தியாவின் மகள்' படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட ஹிலாரியின் என்ஜிஓ
நியூயார்க்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்தியாவின் மகள் ஆவணப்படம் அமெரிக்காவில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனின் அமைப்பின் உதவியுடன் திரையிடப்பட்டது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லீ உட்வின் என்பவர் நிர்பயா பற்றிய ஆவணப்படத்தை எடுத்தார்.

பேட்டி
ஆவணப்படத்திற்காக லெஸ்லீ நிர்பயா வழக்கில் சிறையில் உள்ள முகேஷ் சிங் உள்ளிட்ட குற்றவாளிகளை பேட்டி கண்டுள்ளார். அதில் முகேஷ் சிங்கோ, பலாத்காரத்திற்கு நிர்பயா தான் காரணம். அவர் போராடாமல் அமைதியாக அனுமதித்திருந்தால் தாக்கியிருக்க மாட்டோம் என்று திமிராக பேட்டியளித்துள்ளார்.

தடை
இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை திரையிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் படத்தை அமெரிக்காவில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.

அமெரிக்கா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பருச் கல்லூரியில் திங்கட்கிழமை இந்தியாவின் மகள் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

ஹில்லாரி
ஆவணப் படத்தை திரையிட முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனின் வைட்டல் வாய்சஸ் என்ற என்ஜிஓ ஏற்பாடு செய்திருந்தது.

மெரில் ஸ்ட்ரீப்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை நிர்பயாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 12 மெழுகுவர்த்திகளை ஏற்றினார். அதன் பிறகு பேசிய அவர் கூறுகையில், ஜோதி சிங்(நிர்பயாவின் நிஜ பெயர்) இந்தியாவின் மகளாக இருந்தார். இன்று இரவு நம் மகளாகவும் ஆகிவிட்டார் என்றார்.

ப்ரீடா பின்டோ
இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். இது ஒன்றும் இந்தியாவை அவமதிக்கும் ஆவணப்படம் இல்லை என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரீடா பின்டோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications