மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்... குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.
லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது.
டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.. சென்னையில் 3 நாட்கள் பேய்மழை தொடரும்.. மழையளவு 50 செ.மீ. இருக்கும் என்றது... இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது, நீங்க போய் பி.பி.சி.காரங்ககிட்ட கேளுங்க என்று எகத்தாளமாக பேசினார்...
INDIA: Heavy showers and thunderstorms return to Chennai from Weds. #ChennaiFloods MattT pic.twitter.com/FkU3UYcWYs
— BBC Weather (@bbcweather) December 7, 2015 ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்... தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது.. அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்..
அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது.
பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது. சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது.
ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications