நைஜீரியா மார்க்கெட்டில் இரட்டை குண்டுவெடிப்பு: 118 பேர் பலி 30 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ஜாஸ்: நைஜீரிய மார்க்கெட்டில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் சுமார் 118 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 30க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தென்னாப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அங்கு பள்ளி மாணவிகள் சுமார் 200 பேர் போகோ ஹரம் தீவிரவாதிகள்ஆல் கடத்தப்பட்டனர். மாணவிகளை மீட்கும் பணியை அண்டை நாடுகளின் உதவியோடு நைஜீரியா மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஜாஸ் நகரில் நியூ அபுஜா மார்க்கெட் பகுதியில் வந்த ஒரு டிரக்கில் இருந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், அவசரகால ஊழியர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில் அங்கு வந்த மற்றொரு மினிபஸ்சில் இருந்த மற்றொரு குண்டும் வெடித்தது. இதில் அவசரகால ஊழியர்களும் பெருமளவில் சிக்கிக்கொண்டனர்.

சுமார் 20 நிமிட இடைவெளியில் நடந்த இந்த இரட்டை குண்டு வெடிப்புகளிலும் சிக்கி 118 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று அந்த மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் பாம் அபுயா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+