அமெரிக்காவில் பயங்கரம்... துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி
புளோரிடா: அமெரிக்காவில் உள்ள வங்கியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள செப்ரிங் பகுதியில் இயங்கி வரும் வங்கி ஒன்றிற்குள் புகுந்த 21-வயது இளைஞர் ஒருவர், திடீரென துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளினார். இதில் 5 பேர் இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர்.

பலர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வங்கிக்குள் செல்லும் முன் சரணடையுமாறு இளைஞரிடன் கூறினர். அதற்கு அந்த கொலைக்கார இளைஞன் மறுக்கவே, போலீசார் அதிரடியாக வங்கிக்குள் நுழைந்து சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் பெயர் ஜேபின் சேவியர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக துப்பாக்கிச் சூடு நடந்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில், துப்பாக்கி கலாச்சாரம் பெருகி உள்ளதால் வன்முறையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications