என்னை நம்பினால் கட்டிப் பிடியுங்கள்.. பாரீஸ் மக்களை நெகிழ வைத்த இஸ்லாமியர்
பாரீஸ்: தீவிரவாதத் தாக்குதலால் சின்னாபின்னமாகியுள்ள பாரீஸ் நகர மக்களின் மனங்களை நெகிழ வைத்துள்ளார் ஒரு முஸ்லீம் நபர்.
புண்பட்டுக் கிடக்கும் பாரீஸ் நகர மக்களின் துயரத்தில் தானும் பங்கேற்றதோடு உங்களைப் போலவே நானும் துயரப்பட்டுள்ளேன் என்று கூறி அவர்களை நெகிழ வைத்துள்ளார் அந்த இஸ்லாமியர்.
பாரீஸ் நகரின் பிளேஸ் டி லா ரிபப்ளிக் என்ற சதுக்கப் பகுதியில் தனது கண்களை கட்டிக் கொண்டு நின்றபடி அவர் செய்த காரியம்தான் அனைவரையும் நெகிழ வைத்தது.

நான் ஒரு முஸ்லீம்
தனது இரு கண்களையும் கட்டி கொண்ட அந்த நபர், நான் ஒரு முஸ்லீம். ஆனால் என்னை எல்லோரும் பயங்கரவாதி என்கிறார்கள். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புகிறீர்களா. அப்படியானால் என்னைக் கட்டிப்பிடியுங்கள் என்று அவர் விடுத்த உருக்கமான வேண்டுகோள் அனைவரையும் உருக்கி விட்டது.
கண்ணீர் மல்க
அவரது வேண்டுகோளை ஏற்று பலரும் வரிசையில் நின்று அந்த இஸ்லாமியரை கட்டிப்பிடித்து அவரது வேதனையில் தாங்களும் பங்கு கொண்டனர். இந்த வீடியோ காட்சி தற்போது உலகெங்கும் பரவி வருகிறது.

ஐஎஸ் தாக்குதல்
கடந்த வெள்ளிக்கிழமைன்று பாரீஸில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 130 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

முஸ்லீம்கள் தீவிரவாதத்தை வெறுக்கிறார்கள்
அந்த இஸ்லாமிய நபர் தன்னைக் கட்டிப்பிடித்த அனைவருக்கும் நன்றி கூறி விட்டு அவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், அனைவருக்கும் நல்ல செய்தி போக வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன். நான் முஸ்லீம்தான். ஆனால் தீவிரவாதி இல்லை. முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக இருக்க முடியாது.

தீவிரவாதத்திற்கு மதம் இல்லை
நான் யாரையும் கொன்றதில்லை. கடந்த வெள்ளிக்கிழமை எனது பிறந்த நாள். அன்று நான் வெளியில் கூடப் போகவில்லை. உயிரிழந்த அத்தனை பேரின் குடும்பத்திற்காகவும் நான் இரங்குகிறேன், பிரார்த்திக்கிறேன். முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக இருக்க முடியாது. தீவிரவாதத்திற்கு மதம் இல்லை. இஸ்லாமில் தீவிரவாதத்திற்கும் இடமில்லை.

மதத்தில் இடமில்லை
ஒரு சக மனிதனைக் கொல்லும் உரிமையை எந்த மதமும் தரவில்லை. இஸ்லாமில் தீவிரவாதத்திற்கு இடமே இல்லை. உண்மையான இஸ்லாமியன் யாரையும் கொல்ல மாட்டான் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications