ரஷ்யாவில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறிய போயிங் விமானம்: 50 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ரஷ்யாவில் போயிங் 737 விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 50 பயணிகளும் பலியாகினர்.
டாடார்ஸ்டான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று 50 பயணிகளுடன் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள டொமோடெடோவோ விமான நிலையத்தில் இருந்து கஸானுக்கு நேற்று கிளம்பியது.

விமானம் நேற்று இரவு 7.20 மணி அளவில் கஸானில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது விமானம் விபத்துக்குள்ளானதில் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 50 பயணிகளும் பலியாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவில் கடந்த சில ஆண்டுகளாக விமான விபத்துகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications