மாலியில் ஐநா அமைதி பாதுகாப்பு படையினர் இருவர் குண்டுவெடிப்பில் பலி
Subscribe to Oneindia Tamil
பாமாகோ: மாலியில் ஐநா அமைதி பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் செய்தித் தொடர்பாளர் ஆலிவியர் சாலகாடோ கூறுகையில் இன்று காலை, மாப்டியில் வடக்கு பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசிப்பட்டது.
இதில் ஐநா அமைதி பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் பலியாகிவிட்டனர். 4 பேர் காயமடைந்தனர். மாலி ஆப்பிரிக்கா நாட்டின் மிகப் பெரிய மற்றும் ஏழை நாடுகளில் ஒன்றாகும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மாலியில் வடக்கு பகுதியிலும் மத்திய பகுதியிலும் வன்முறை வெடித்தது. இது அண்டை நாடுகளான நைகர், மற்றும் புர்னிகா ஃபாசோவுக்கும் பரவியது.
இதையடுத்து பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஐநா அமைதி படை சார்பில் 13 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டனர். அன்று முதல் 9 ஆண்டுகளாக ஐநா அமைதி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications