தாயின் கருவில் குண்டடிபட்ட பெண் குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
டாக்கா: வங்கதேசத்தில் இரு போராளி அமைப்புகளுக்கு இடையே நடந்த மோதலில் 8 மாத கர்ப்பணியின் வயிற்றில் இருந்த பெண் குழந்தை மீது குண்டு பாய்ந்தது.
வங்கதேசத்தில் உள்ள மகுராவைச் சேர்ந்தவர் நஜ்மா. அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கையில் கடந்த மாதம் அப்பகுதியில் இரு போராளி அமைப்புகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் நஜ்மாவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
குண்டு கருவில் இருந்த குழந்தையின் வலது தோள்பட்டையை தாண்டிச் சென்று வலது கண்ணில் காயம் படுத்தியது. இதையடுத்து நஜ்மா டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள்.
இந்த அறுவை சிகிச்சை 3 மணிநேரம் நடந்தது. குழந்தையையும், தாயையும் சேர்த்து காப்பாற்ற மருத்துவர்கள் 3 மணிநேரம் போராடி வென்றனர். இதையடுத்து குழந்தை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டது. குழந்தைக்கு சுரையா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சுரையா ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். அப்போது சுரையா தனது தாய் நஜ்மாவுடன் சேர்த்து வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications