4 ஆண்டுகளாக தங்கையை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவனுக்கு 10 வருடம் சிறை
Subscribe to Oneindia Tamil
லண்டன்: தங்கையுடன் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக தகாத உறவு வைத்திருந்த 13வயது சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது இங்கிலாந்து நீதிமன்றம்.
இங்கிலாந்து நாட்டின் லின்கோலின் கிரவுன் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டான். அவனிடம் நடத்தப் பட்ட விசாரணையில் அச்சிறுவன் கடந்த 4 வருடங்களாக கிட்டத்தட்ட 50 தடவைகளுக்கும் மேலாக தனது தங்கையுடன் தவறான உறவு கொண்டதை ஒத்துக் கொண்டான்.
அதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications