ஒன்றல்ல இரண்டல்ல.. 4 தடுப்பூசி.. எல்லாமே இறுதி கட்டம்.. இதுதான் பிரேசில் டெக்னிக்.. சோதனை விறுவிறு
பிரேசிலியா: பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சகம் செவ்வாய் அன்று ஜான்சன் அண்ட் ஜான்சனின் புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான பரிசோதனை தடுப்பூசிக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரேசில் பரிசோதனையை தொடங்கும் நான்காவது தடுப்பூசி ஆகும்.
உலகில் லட்சக்கணக்கான மக்களை பலி கொண்டு வரும் கொரோனாவிற்கு முடிவு கட்ட உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.
தற்போதைய நிலையில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி, சீனாவின் சினோவாக் பயோடெக் தடுப்பூசி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, அமெரிக்காவின் மார்டனா தடுப்பூசி ஆகியவை இறுதி கட்ட சோதனையில் முன்னணியில் இருக்கின்றன. இந்த வரிசையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியும் இணைந்துள்ளது.

நான்கு தடுப்பூசி
அமெரிக்க மருந்து நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. முதல் இரண்டு ஸ்டேஜ் சோதனைகளை முடித்துள்ள அந்நிறுவனம் இறுதிகட்ட பரிசோதனையை தொடங்கி உள்ளது. ஏனெனில் மூன்றாம் கட்டமாக நடத்தப்படும் இறுதிகட்ட பரிசோதனையை மனிதர்களுக்கு பெரிய அளவில் நடத்தும் போது தான் பக்கவிளைவு இருக்கிறதா அல்லது சாதகமான நிலை உள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதனால் தான் அனைத்து தடுப்பூசிகளும் இறுதிகட்ட முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.

பிரேசில் ஒப்புதல்
உலகிலேயே அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அனைத்து பரிசோதனை தடுப்பூசிக்கு அனுமதி அளித்து வருகிறது. மருந்து வெற்றி என்றால் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இதை அனுமதிக்கிறது. இதன்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பிரேசிலில் ஏழு மாநிலங்களில் 7,000 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசியை பரிசோதிக்கிறது. இந்த நிறுவனம் பிரேசில் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 60,000 பேருக்கு தனது சோதனை தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது.

பிரேசில் கொரோனா
அமெரிக்காவிற்குப் பிறகு, தென் அமெரிக்க நாடான பிரேசில் தான் இரண்டாவது மிக அதிகமான நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளைக் கொண்டுள்ள நாடு ஆகும். 3.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 110,000 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

ஒப்புதல் அளித்த பிரேசில்
பிரேசில் நாடு தற்போதைய நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த தடுப்பூசி, சீன மருந்து நிறுவனமான சினோவாக் பயோடெக் மற்றும் அமெரிக்க நிறுவனமான ஃபைசர் ஆகியவற்றுடன் இணைந்து ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி ஆகிய தடுப்பூசிகளுக்கும் மூன்று கட்ட சோதனைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Recommended Video

பிரேசில் ஆர்வம்
ரஷ்யாவின் "ஸ்பூட்னிக் வி" தடுப்பூசியை பரிசோதித்து தயாரிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தில் பிரேசில் மாநிலமான பரணா கடந்த வாரம் கையெழுத்திட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்ற உலகின் முதல் நாடாக ரஷ்யா உள்ளது. ரஷ்யாவும் அடுத்த வாரம் 3ம் கட்ட சோதனையை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications