பிரேசிலில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- 1லட்சத்தை நெருங்கியது பாதிப்பு-ஒரே நாளில் 2,449 பேர் மரணம்
பிரேசிலியா: உலக நாடுகளில் பிரேசிலில் கொரோனா மீண்டும் உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 98,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 24 மணிநேரத்தில் 2,449 பேர் மரணம் அடைந்தனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.8 கோடியை தாண்டியுள்ளது. உலகின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,85,86,111 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,66,636 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 16,31,03,201 ஆகவும் அதிகரித்துள்ளது.
பிரேசிலில்தான் தற்போது கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஒரே நாளில் 98,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிரேசிலில் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 2,449 பேர் பலியாகினர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 60,800 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,269 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications