பேய்களுடன் ஓரு சுற்றுலா.. திகில் கிளப்பும் பிரேசில் ஹாரர் பூங்கா.. அத்தனை பேயும் இங்க தான் இருக்கு!
கொரோனா தொற்று காரணமாக பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த பிரபல திகில் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பிரேசிலியா: கொரோனா தொற்று காரணமாக பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த பிரபல திகில் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனா தொற்று பரவலில் நேற்று வரை இரண்டாம் இடத்தில் இருந்த பிரேசில், இந்தியா அந்த இடத்தை பிடித்துவிட்டதால் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
ஒருபக்கம் கொரோனா பரவல் அதிகமானாலும், மறுபக்கம் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் இம்மாதமும் ஊரடங்கை நீட்டித்துள்ள மத்திய அரசு, பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால், மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
அதேபோல் தான் பிரேசில் நாட்டிலும் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக உணவகங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஹோபி ஹாரி பூங்கா
அந்த வகையில், பிரேசிலின் வின்ஹெதோ நகரில் அமைந்துள்ள பிரபல திகில் பூங்காவான ஹோபி ஹாரி பூங்கா பல மாதங்கள் கழித்து பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையறிந்த உள்ளூர் மக்கள் முதல் நாளே பூங்காவில் திரண்டுவிட்டனர்.

ஜோம்பீக்கள்
பயமும் ஒருவகையில் நமக்கு சந்தோஷம் தரக்கூடியவை தான் என்பதை நிரூபிக்கின்றன இதுபோன்ற திகில் பூங்காக்கள். பேய் வேடமிட்ட மனிதர்கள் நாம் எதிர்பாராத சமயத்தில் திடீரென முன்வந்து பயமுறுத்துவதை வாடிக்கையாளர் வெகுவாக என்ஜாய் செய்கின்றனர். சாலைகளில் ஆங்காங்கே ஜோம்பீக்கள் நடமாடிக்கொண்டிருப்பதை எல்லாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.

அது மட்டும் ஏமாற்றம்
கொரோனா தொற்றுக்கு முன்பு இந்த பூங்காவில் பார்வையாளர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது காரைவிட்டு இறங்க அவர்களுக்கு அனுமதி இல்லை. இது தங்களுக்கு ஏமாற்றமாக உள்ளதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதால், அதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என பூங்கா நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பேய்.. பூதம்.. வேதாளம்
2.7 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட ஹோபி ஹாரி திகில் பூங்காவில் பார்வையாளர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை தங்கள் காரில் மெதுவாக சுற்றிவர முடியும். வழியில் பேய், பூதம், அசுரர்கள், ஜோம்பீக்கள், வேதாளம் உள்பட அத்தனை பேய் வகைகளையும் பார்க்க முடியும். இதுபோன்ற திரில் எண்டர்டெயின்மெண்டுக்கு உத்தரவாதம் தருகிறது அந்த பூங்கா.

குதூகலத்தில் மக்கள்
பல மாதங்களாக வீட்டிலேயே அடைப்பட்டு கிடந்த மக்களுக்கு, இந்த திகில் பூங்காவின் திறப்பு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காரில் இருந்தபடியே சர்க்கஸ் உள்ளிட்டவைகளை பார்க்கவும் பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது. சில இடங்களில் திறந்தவெளி தியேட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications