பேய்களுடன் ஓரு சுற்றுலா.. திகில் கிளப்பும் பிரேசில் ஹாரர் பூங்கா.. அத்தனை பேயும் இங்க தான் இருக்கு!
கொரோனா தொற்று காரணமாக பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த பிரபல திகில் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பிரேசிலியா: கொரோனா தொற்று காரணமாக பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த பிரபல திகில் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனா தொற்று பரவலில் நேற்று வரை இரண்டாம் இடத்தில் இருந்த பிரேசில், இந்தியா அந்த இடத்தை பிடித்துவிட்டதால் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
ஒருபக்கம் கொரோனா பரவல் அதிகமானாலும், மறுபக்கம் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதை பார்க்க முடிகிறது. இந்தியாவில் இம்மாதமும் ஊரடங்கை நீட்டித்துள்ள மத்திய அரசு, பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளதால், மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
அதேபோல் தான் பிரேசில் நாட்டிலும் ஊரடங்கு கட்டுப்பாட்டில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக உணவகங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஹோபி ஹாரி பூங்கா
அந்த வகையில், பிரேசிலின் வின்ஹெதோ நகரில் அமைந்துள்ள பிரபல திகில் பூங்காவான ஹோபி ஹாரி பூங்கா பல மாதங்கள் கழித்து பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையறிந்த உள்ளூர் மக்கள் முதல் நாளே பூங்காவில் திரண்டுவிட்டனர்.

ஜோம்பீக்கள்
பயமும் ஒருவகையில் நமக்கு சந்தோஷம் தரக்கூடியவை தான் என்பதை நிரூபிக்கின்றன இதுபோன்ற திகில் பூங்காக்கள். பேய் வேடமிட்ட மனிதர்கள் நாம் எதிர்பாராத சமயத்தில் திடீரென முன்வந்து பயமுறுத்துவதை வாடிக்கையாளர் வெகுவாக என்ஜாய் செய்கின்றனர். சாலைகளில் ஆங்காங்கே ஜோம்பீக்கள் நடமாடிக்கொண்டிருப்பதை எல்லாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.

அது மட்டும் ஏமாற்றம்
கொரோனா தொற்றுக்கு முன்பு இந்த பூங்காவில் பார்வையாளர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது காரைவிட்டு இறங்க அவர்களுக்கு அனுமதி இல்லை. இது தங்களுக்கு ஏமாற்றமாக உள்ளதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதால், அதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என பூங்கா நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பேய்.. பூதம்.. வேதாளம்
2.7 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட ஹோபி ஹாரி திகில் பூங்காவில் பார்வையாளர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை தங்கள் காரில் மெதுவாக சுற்றிவர முடியும். வழியில் பேய், பூதம், அசுரர்கள், ஜோம்பீக்கள், வேதாளம் உள்பட அத்தனை பேய் வகைகளையும் பார்க்க முடியும். இதுபோன்ற திரில் எண்டர்டெயின்மெண்டுக்கு உத்தரவாதம் தருகிறது அந்த பூங்கா.

குதூகலத்தில் மக்கள்
பல மாதங்களாக வீட்டிலேயே அடைப்பட்டு கிடந்த மக்களுக்கு, இந்த திகில் பூங்காவின் திறப்பு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காரில் இருந்தபடியே சர்க்கஸ் உள்ளிட்டவைகளை பார்க்கவும் பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது. சில இடங்களில் திறந்தவெளி தியேட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications