433 மில்லியன் மதிப்பிலான 1 பவுண்ட் நாணயங்களை செல்லாதவையாக அறிவித்தது இங்கிலாந்து அரசு
433 மில்லியன் மதிப்பிலான 1 பவுண்ட் நாணயங்கள் செல்லாது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
லண்டன்: 433 மில்லியன் மதிப்பிலான 1 பவுண்ட் நாணயங்கள் செல்லாது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஆனால் பழைய நாணயங்களை வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ம் தேதி இரவு திடீரென அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார். அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து இன்று வரை பணத்தட்டுப்பாடு சீரானதாக தெரியவில்லை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அரசு எதிர்பார்த்தது நடந்ததோ இல்லையோ, ஆனால் மக்கள் எதிர்பார்க்காத பல்வேறு இன்னல்களை தற்போது வரை நடந்தேறி வருவது வேதனைக்குரியது. 50 நாட்களில் நிலைமை சீரடைந்துவிடும் என்றெல்லாம் கூறினார்கள். தற்போது வரை வங்கிக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் மக்கள் படையெடுத்த வண்ணம் தான் இருக்கின்றனர். அதிலும் கிராமப்புற மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தினமும் வங்கி வாசலில் கால்கடுக்க நின்று பணத்தை எடுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்திலும் போலி நாணயங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க, தற்போது புழக்கத்தில் உள்ள 433 மில்லியன் மதிப்பிலான 1 பவுண்ட் நாணயங்கள் செல்லாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் நம்ம நாடு மாதிரி அடிதடியா அறிவிப்பை வெளியிட்டு இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை இங்கிலாந்து.
புதிய நாணயங்கள் வரும் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் பழைய நாணயங்களை வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து புதிய நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தற்போது 1.3 பில்லியன் மதிப்பிலான நாணயங்கள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது. இதில் 433 மில்லியன் மதிப்பில், 1 பவுண்ட் நாணயங்கள் அடக்கம். இவற்றில் போலி நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
எனவே பழைய ஒரு பவுண்ட் நாணயங்களுக்கு பதிலாக புதிய ஒரு பவுண்ட் நாணயங்களை வெளியிடவுள்ளது முடிவு செய்துள்ளது இங்கிலாந்து அரசு. தற்போது பிரிட்டனில் புழக்கத்தில் இருக்கும் பழைய 1 பவுண்ட் நாணயங்கள், 1983-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications