விமான சேவை கடும் பாதிப்பு.. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் திடீரென 48 மணி நேரம் ஸ்டிரைக்
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் ஊதிய பிரச்சனையால் திடீரென 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடங்கியுள்ளனர். இதனால் விமான சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சரியான முன்னறிவிப்பை பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனம் கொடுக்காததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
உலகின் முன்னணி விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தினசரி பல்லாயிரம் பணிகளுக்கு உலகம் முழுவதும் விமான சேவை அளித்து வருகிறது.
இந்த விமானங்களை இயங்கும் பயணிகளுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ஊதியம் பிடிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.

வேலை நிறுத்தம்
இது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம் , பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.ஆனால் விமானிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் விமானிகள் சங்கம் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தது. இதன்படி 48 மணி நேர வேலைநிறுத்தத்தை பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானிகள் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக இன்றும் நாளையும் ஏராளமான விமான சேவைகள் உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு இல்லை
விமானிகளின் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக பயணிகளுக்கு சரியான முன்னறிவிப்பை பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக பல்லாயிரம் பயணிகள் பயண திட்டங்களை மாற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக பலரும் பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்தை வசை பாடிவருகிறார்கள்.

எங்களுக்கு வேறுவழியில்லை
இந்நிலையில் விமானிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், ‘இது விமானிகளின் பொறுப்பற்ற நடவடிக்கை' என விமர்சித்துள்ளது. விமானிகள் சங்கமோ தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்ததால் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அடுத்ததாக செப்டம்பர் 27ஆம் தேதி மறுபடியும் வேலை நிறுத்தப் போராட்டத்தை பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இழப்பீடு வழங்க வேண்டும்
இதனிடையே விமானம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணிகளுக்கு டிக்கெட் இழப்பீடு, புதிய பயண ஏற்பாடுகள், போன்றவைற்றை பயணிகளுக்கு அளிக்க வேண்டிய நிலையில் பிரிட்டிஸ் ஏர்வேஸ் உள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு இந்த இரண்டு நாளில் சுமார் 1051 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications