80 வயது சீக்கியரை தாக்கிய 20 வயது இங்கிலாந்து பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை
லண்டன்: இங்கிலாந்தில் 80 வயது சீக்கியரை தாக்கிய இளம்பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
இங்கிலாந்தின் மேற்கு மிட்லேண்ட்ஸில் உள்ள கவென்ட்ரி நகரைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சிங்(80). கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் சிட்டி சென்டர் என்ற இடத்திற்கு சென்றபோது கோரல் மில்லர்சிப்(20) என்ற பெண் அவரை தாக்கினார். கோரல் சிங்கை கையால் குத்தியதில் அவர் தரையில் விழுந்தார். அவர் தலைப்பாகையும் கீழே விழுந்தது.
இந்த தாக்குதலில் சிங்கிற்கு மூக்கில் அடிபட்டது. உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த சிங் இந்த தாக்குதல் நடந்த 3 மாதத்திற்கு பிறகு இறந்துவிட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கோரலை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வார்விக் கிரவுன் நீதிமன்றம் கோரலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஒரு வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் வங்கி கார்டுகளை திருடியதற்காக கோரலுக்கு 20 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications