கள்ளக் காதல்.. 4 குழந்தைகளுக்கு தாயான தங்கையை கொன்ற அண்ணன்
பாகிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுப்பட்ட தங்கையை நான்கு குழந்தைகளின் தாய் என்றும் பாராமல் சகோதரரே கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கராச்சி: பாகிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக கூறி தங்கையை நான்கு குழந்தைகளின் தாய் என்றும் பாராமல் உடன் பிறந்த சகோதரரே கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் கயிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குலாம் ஹுசைன் கோபங். இவரது தங்கைக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர், அவரை கத்தியால் குத்தி ஆணவ கொலை செய்துள்ளார். இந்தக் கொலை குறித்து கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் குடும்ப பிரச்சினைகளால் ஆகும் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு க்வாண்டீல் பலோச் என்ற நடிகை தனது அண்ணனால் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications