புருனேவில் விரைவில் கள்ளக் காதலர்களை கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம்
புருனே: புருனே நாட்டில் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் முஸ்லிம்களுக்கு கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான புருனேவில் மன்னர் ஹசனல் போல்கியா(67)வின் ஆட்சி நடந்து வருகிறது. அவர் தனது நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு கடுமையான சட்டங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே புருனேவில் பிற முஸ்லிம் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தான் புதிய சட்டங்கள் வரும் 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படுகிறது.

புதிய சட்டத்தின்படி கள்ளத்தொடர்பு வைப்போர் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள், திருடுபவர்களின் கைகள் வெட்டப்படும். மேலும் மது அருந்தினாலோ, கருச்சிதைவு செய்தாலோ சவுக்கடி கிடைக்கும்.
இந்த தண்டனைகள் புருனேவில் வாழும் 420,000 முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications