பெருவில் 300 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து... 44 பேர் பலி!
லிமா : பெரு நாட்டில் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் விழுந்ததில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரு நாட்டில் சாலை விபத்துகள் என்பது அடிக்கடி நிகழ்வாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு தலைநகர் லிமாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 52 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பிப்ரவரி 21ல் மீண்டும் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஒகோனா பகுதியில் அமைந்துள்ள மனபெரிகனசூர் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்ற சென்று கொண்டு இருந்துள்ளது. பேருந்து நெடுஞ்சாலையின் ஆபத்தான வளைவு பகுதியில் திரும்பும் போது நிலை தடுமாறி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
பேருந்து கவிழ்ந்து விழுந்த இடத்தில் ஆறு ஓடுவதால் நீரில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் 43 பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தார்.
இதனிடையே மீட்பு குழுவினர் ஆற்றில் குதித்து உடல்களை மீட்டு கரை சேர்த்து வருகின்றனர். 300 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளதால் உடல்களை மீட்பதில் சிரமம் உள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதுவரை 44 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சில உடல்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் பற்றி முழு விவரங்களை கூற முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications