மீத்தேன் வாயு கசிவு... கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம் - அச்சத்தில் மக்கள்
கலிபோர்னியா: பேரழிவை ஏற்படுத்தும் மீத்தேன் நச்சு வாயு கசிவு சம்பவத்தையடுத்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கசிவை அடைக்கும் பணி நிறைவடைய மார்ச் மாதம் வரை ஆகும் என்று சோகால்கேஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளதால் கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘சோகால் கேஸ்' (Southern California Gas Company) எனப்படும் பிரபல தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 8 ஆயிரம் அடிக்கும் மேல் ஆழமுள்ள கிணற்றில் இருந்து கேஸ் கசிவது, கடந்த ஆண்டு அக்டோபர் 23 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மீத்தேன் கசிவு, கடந்த நவம்பர் மாத இறுதியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இதனால் பெருமளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என்று கலிஃபோர்னியா காற்று வள வாரியம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் தற்போதும் மணிக்கு 30 ஆயிரம் முதல் 58 ஆயிரம் கிலோ வரை நிறை கொண்ட நச்சு மீத்தேன் வாயு காற்றில் கலந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாயு கசிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகில் உள்ளது போர்டர் ராஞ்ச் பகுதி, அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தற்போது தற்காலிகமாக வேறு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குமட்டலும், மூக்கில் ரத்தக் கசிவும் ஏற்படுவதாக அவர்கள் புகார் கூறியதை அடுத்து, கடந்த திங்கள் அன்று அப்பகுதி மக்களை கலிபோர்னியா மாநில கவர்னர் ஜெர்ரி பிரவுன் சந்தித்து ஆறுதல் கூறினார். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போர்டர் ராஞ்ச் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக கவர்னர் பிரவுன் புதனன்று அறிவித்தார். மேலும் அனைத்து அரசு அதிகாரிகள், இந்த நிலைமையை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சோகால்கேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டின் லாய்ட் கூறும்போது, கசிவை அடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், துரிதமாகவும் பாதுகாப்பாகவும் கசிவை அடைத்து அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதே தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். கசிவை அடைக்கும் பணி நிறைவடைய மார்ச் மாதம் வரை ஆகும் என்று சோகால்கேஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீத்தேன் வாயு எடுப்பதானால் கலிபோர்னியாவைப் போல ஆபத்தான நிலை உருவாகும் என்று தெரிந்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க மத்திய அரசு அனுமதிப்பது ஏன் கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications