இந்தோனேசியாவில் அடுத்தடுத்த நிலநடுக்கம்.. இந்தியா பாதிக்குமா?
இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அனைவரும் லாம்போக் நகரத்தின் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
லாம்போக்: இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அனைவரும் லாம்போக் நகரத்தின் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இது இந்தியர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு பத்து மணியளவில் இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் வந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பெரிதும் அச்சமடைந்து என்னசெய்வதென்று புரியாமல் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

உயிரிழப்புகள்
நிலநடுக்கத்தின் போது பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், அதன் இடுக்கில் சிக்கி சில பேர் மோசமாக காயமடைந்தனர். அது மட்டும் அல்லாமல் பல பேர் தன் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இதுவரை காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
நேற்று இரவு எற்பட்ட நிலநடுக்கத்தினால் தற்போது லாம்போக் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து லாம்போக் தீவு முழுவதும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தீவில் வசிக்கும் பொதுமக்கள் சில முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

430 பேர் உயிரிழந்தனர்
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் போல இந்த மாதம் தொடக்கத்தில் அதே லாம்போக் தீவில் மிக பெரிய நிலநடுக்கம் ஒன்று எற்பட்டது, அந்த நிலநடுக்கத்தின் போதும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, அது மட்டும் அல்லாமல், அந்த நிலநடுக்கத்தில் சுமார் 430 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நிலநடுக்கம்
அந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆனால் இந்தியாவில் இது பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications