கனடாவில் 8 பேரைச் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கொலையாளி!
ஒட்டாவா : கனடாவில் 53 வயது நபர் ஒருவர் 8 பேரை சுட்டுக் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் மேற்கு மாகாணமான அல்பெர்ட்டா நகர் எடாமோண்டன் பகுதியைச் சேர்ந்தபர் பூ லாம் (53) என்ற நபர். சம்பவத்தன்று வீடொன்றில் புகுந்த லாம், அங்கிருந்த 2 குழந்தைகள் உள்பட 8 பேரை சுட்டுக்கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தொடர்ந்து போலீசார் நடத்தி விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட லாமின் உடல் சச்கட்சான் ஓட்டல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த ஓட்டலில் இவர் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
லாம் கொலை செய்தவர்களில் 6 பேர் 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள், 2 பேர் குழந்தைகள்.
கனடாவில் நடந்த மிகப்பெரிய கொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலைகளுக்கான காரணம் குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications