ஈராக்: தொடர் கார் குண்டுவெடிப்புகளில் சிக்கி 39 பேர் பலி, 120 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: ஈராக்கில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

ஈராக்கின் ஷைட் மாவட்டத்துக்கு உட்பட்ட பயா பகுதியில் நேற்று ஒர்க்ஷாப் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்ததில், 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல், ஷன்னி மாவட்டம் லாஜி என்ற இடத்தில் மற்றொரு ஒர்க்ஷாப்பில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் பலியானார்கள், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Car bomb attacks across Iraq kill at least 39

அதனைத் தொடர்ந்து, மத்திய பாக்தாத் அருகே மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் கார் குண்டு வெடித்ததில் 5 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈராக்கில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 30 பேர் பலியானார்கள். 123 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தநிலையில், குண்டுவெடிப்புகளில் சிக்கி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 9 பேர் உயிரிழந்த காரணத்தால், தற்போது பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+