பிடித்த பாடலை கேட்டுக் கொண்டே இன்று மதியம் தற்கொலை செய்யப்போகும் தச்சு தொழிலாளி

Subscribe to Oneindia Tamil

ஜுரிச்: இங்கிலாந்தைச் சேர்ந்த தச்சு தொழிலாளர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருக்கும் டிக்டினாஸ் மருத்துவமனையில் இன்று மதியம் 2 மணிக்கு தனது உயிரை மாய்த்துக் கொள்ள உள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பாப் கோல்(68). தச்சு தொழிலாளி. கடந்த மே மாதம் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதும், காப்பாற்றும் நிலையை அவர் தாண்டிவிட்டதும் தெரிய வந்தது. அவர் அதிகபட்சமாக 3 மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

Carpenter to end his life today at Dignitas suicide clinic

எப்பொழுதும் ஓடியாடி வேலை செய்த பாபுக்கு படுத்த படுக்கையாக இருக்க பிடிக்கவில்லை. இதையடுத்து அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் தற்கொலை செய்ய இங்கிலாந்து சட்டங்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர் தற்கொலையை அனுமதிக்கும் சட்டம் உள்ள சுவிட்சர்லாந்து சென்றார்.

அங்கு ஜுரிச் நகரில் உள்ள டிக்னிடாஸ் மருத்துவமனையில் சேர்ந்தார். அந்த மருத்துவமனையில் தற்கொலை செய்ய மருத்துவர்கள் உதவி செய்து வருகிறார்கள். குணப்படுத்தவே முடியாத நோயால் வாடுபவர்கள் தற்கொலை செய்ய உதவி செய்யப்படுகிறது.

அந்த மருத்துவமனையில் இன்று மதியம் 2 மணிக்கு பாப் தனது உயிரை விட உள்ளார். அவர் தனக்கு பிடித்த பாடலை கேட்டுக் கொண்டே உயிரை மாய்த்துக் கொள்ள உள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதே மருத்துவமனையில் தான் அவரது மனைவி ஆன் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட ஆன் சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் தனது உயிரை விட்டார். இந்நிலையில் பாப் கூறுகையில்,

இங்கிலாந்தில் தற்கொலையை அனுமதித்து சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும். என் நாட்டில் என் படுக்கையில் கௌரவமாக இறக்க விரும்பினேன் முடியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+