ஆஸ்திரேலியாவில் திருநங்கை காதலியை கொன்று உடலை சமைத்த ஷெஃப்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் தனது காதலியை கொன்று அவரது உடலை வெட்டி சமைத்த ஷெஃப் போலீசில் இருந்து தப்பி தற்கொலை செய்து கொண்டார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள டெனரிப் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஷெஃப் அதாவது சமையல் கலைஞரான மார்கஸ் வோக்(28). அவருடன் இந்தோனேசியாவைச் சேர்ந்த காபரே டான்ஸரான மாயங் பிரசட்யோவும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வோக் தனது காதலியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

சில பாகங்களை சமைத்துவிட்டு மீதமுள்ள பாகங்களை ஒரு பையில் வைத்து குடியிருப்புக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். இந்நிலையில் அவர் சமைத்த வாடை வந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஏதோ வித்தியாசமான வாடை வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து வோக்கின் வீட்டை திறந்து பார்த்தபோது தான் பெண் ஒருவரின் உடல் சமைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வோக்கை பிடித்தனர். இருப்பினும் அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்று கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்துவிட்டார்.

இது குறித்து வோக்கின் தாய் டாரத்தி கூறுகையில்,
என் மகன் ஒரு வாரமாக என்னை தொடர்பு கொள்ளவே இல்லை. அவன் என்ன செய்தான் என்று எனக்கு தெரியாது. அவன் கப்பலில் வேலை செய்ததாக கேள்விப்பட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications