வெள்ள நிவாரணம்...சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: தமிழக வெள்ள நிவாரண நிதியாக சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது.

சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் துயர் துடைப்பு நிவாரணப் பணிகளுக்கு உதவ சர்வதேச சமுதாயத்துக்கு தெற்காசிய செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

Chennai floods: Singapore to contribute to flood relief

இதனை ஏற்று சிங்கப்பூர் அரசின் சார்பில் 75 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் 50 லட்சம் ரூபாய்) நிதியுதவி அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டு மக்களுடன் சிங்கப்பூர் மக்களின் உணர்வுகளும் ஒன்றிணைந்துள்ளது என்பதை உணர்த்தும் விதமாக சிங்கப்பூர் அரசு அளித்துள்ள இந்த நிதியுதவியானது, உங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசின் துயர்துடைப்பு பணிகளில் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன் என அக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+