விறுவிறு! கார்ல்செனை தண்ணீர் குடிக்க வைத்த பிரக்ஞானந்தா.. இறுதிப்போட்டியில் வென்றால் பரிசு எவ்வளவு?
பெகு: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று மாலை நடைபெறவுள்ளது. உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்செனுடன் இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா மோதுகிறார். நேற்றைய முதல் சுற்று டிராவில் முடிந்ததால் இன்று ஆட்டம் செம விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார். இதையடுத்து 4 டை பிரேக்கரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார் பிரக்ஞானந்தா. 20 ஆண்டுகள் கழித்து செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மிகக்குறைந்த வயதுடையவர் என்ற பெருமையையும் ஒருசேரப் பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா.
பிரக்ஞானந்தா இறுதி ஆட்டத்தில் உலகின் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) மோதி வருகிறார். இறுதிச்சுற்று இரு சுற்று போட்டிகளைக் கொண்டது. இரண்டு சுற்றுகளும் சமன் ஆனால் ஆட்டம் நாளை டை பிரேக்கருக்கு செல்லும்.
இறுதிப்போட்டியின் முதல் சுற்று நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 7.22 மணிக்கு போட்டி நிறைவுற்றது. பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். ப்ரக்ஞானந்தாவின் காய் நகர்த்தலுக்கு கார்ல்சன் மிகவும் யோசித்தே காய் நகர்த்தினார். தன்னுடைய 13வது காய் நகர்த்தலுக்கு மட்டும் கார்ல்சென் 27 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.
சிறிய தவறும் ஆட்டத்தை மாற்றிவிடும் என்பதால் இருவரும் மிகவும் நிதானமாகவே ஆடினர். 35-வது நகர்வில் இருவரும் டிரா செய்துகொள்ள ஒப்புக்கொண்டனர். இதனால் ஆட்டம் சமன் செய்யப்பட்டது. முதல் சுற்று போட்டியில் இருவரும் சமன் செய்ததால், இன்று நடைபெறும் இரண்டாவது சுற்று போட்டியில் வெற்றி பெறுபவரே சாம்பியன் பட்டம் வெல்வார்.

இன்று மாலை இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதில் கறுப்பு நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடுவார். 2வது சுற்று போட்டியும் டிரா ஆனால் போட்டி டை பிரேக்கருக்கு நகரும். டை பிரேக்கர் ஆட்டம் நாளை நடைபெறும்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் நபருக்கு 1,10,000 அமெரிக்கா டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 91 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் நபருக்கு 80,000 அமெரிக்கா டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 66 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மூன்றாவது இடம் பெறும் வீரர் 60,000 யு.எஸ். டாலர் பெறுவார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications