எங்கெங்கும் பனி.. மான்களுக்கு உணவளித்த நல்லுள்ளங்கள்.. இதயம் அள்ளும் சிகாகோ காட்சிகள்!
சிகாகோ: சிகாகோ நகரம் பனியால் சூழப்பட்டு கிடக்கிறது. வரலாறு காணாத இந்த குளிரை அந்நகரம் 34 வருடங்களுக்கு பிறகு சந்தித்துள்ளது.
மெல்ல மீண்டு வரும் நகரத்துக்குள் நடக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே.
சென்னை வெள்ளம், கஜா புயல் போன்ற பேரழிவுகள் வரும்போது தான் மனிதனுக்குள் உறங்கி கொண்டிருக்கும் மனித நேயம் தட்டி எழுப்பப்படுகிறது. அது போன்ற ஒரு விஷயம் தான் சிகாகோவிலும் நிகழ்ந்திருக்கிறது.

கடும் குளிரை தாங்க முடியாத காரணத்தினால் வீடு இல்லாத 70 மக்களுக்கு சிலர் சேர்ந்து டௌன்டவுன் பக்கத்தில் கேம்ப் அமைத்து கொடுத்திருக்கிறார்கள். அப்போது சூடாக இருப்பதற்கு ப்ரோபனே டேங்க் கொடுத்து உதவி இருக்கிறார்கள்.
துரதிருஷ்டவசமாக அதில் ஒரு டேங்க் வெடித்து பெரிய நெருப்பு உண்டாகி இருக்கிறது. அப்புறம் தீ அணைப்பு வாகனம் எல்லாம் வந்து கடவுள் அருளால் ஒரு மரணம் கூட நிகழாமல் தப்பித்து விட்டார்கள். அதன் பின் தன்னார்வ தொண்டு நிறுவனமான சால்வட்டின் ஆர்மி தனது வார்மிங் சென்டருக்கு அந்த மக்களை கூட்டிப் போக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அங்கே தான் ட்விஸ்ட்.
பெயர் தெரியாத மனிதர் ஒருவர் அங்கு உள்ள மிக பெரிய ஹோட்டலில் அந்த மக்களுக்கு ஒரு வாரம் தங்க ஏற்பட்டு செய்து விட்டு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் சென்றிருக்கிறார். ஓன்று அல்ல 70 பேருக்கு 7 நாட்களுக்கு அந்த பெரிய ஹோட்டலில் தங்க இடம் ஏற்பாடு செய்திருப்பது மிக பெரிய விஷயம். அந்த நல்ல மனிதர் யார் என்று தெரியா விட்டாலும் சிகாகோ நகரம் அவரை கொண்டாடி கொண்டிருக்கிறது.
அது மட்டுமில்லைங்க, காடுகளில் உள்ள விலங்குகளுக்கு குளிரில் சாப்பாடு போடவும் மனிதர்கள் படையெடுத்திருக்கிறார்கள்.
சிகாகோ நகரின் குட் சமாரிடன் மாதிரி மாறி நம்ம ஆளுங்க 25 மான் கூட்டத்துக்கு உணவளித்து சூப்பரா செய்கிற காரியங்களை பார்க்க இந்த வீடியோவைப் பாருங்க.
- Inkpena சஹாயா
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications