அமெரிக்கா: சிகாகோவில் தொடர் துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொடர்ச்சியாக மர்ம மனிதர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர்.

சிகாகோ நகரில் நேற்று மாலை மருந்து கடை ஒன்றில் பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து திடீரென பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

Chicago Shootings: 4 dead, 7 injured

இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. மருந்து கடையில் இருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். ஆனால் மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமடைந்து கீழே விழுந்தனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.

இதனால் மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+