For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிலியில் பச்சிளம் சிசுவை 6250 ரூபாய்க்கு வாங்கிய நபருக்கு 2 ஆண்டு சிறை!

Google Oneindia Tamil News

சான்டியாகோ: சிலி நாட்டில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை இணையதளம் மூலம் இந்திய மதிப்பில் 6,250 ரூபாய்க்கு வாங்கிய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு வெரோனிகா என்னும் 18 வயது பெண், பிறந்து இரு நாட்களே ஆன தனது பெண் குழந்தையை இன்டர்நெட் மூலம் ஜுவான் கார்லோஸ் என்பவருக்கு 102 டாலர்களுக்கு அதாவது ரூபாய் 6,250க்கு விற்றுள்ளார்.

அன்று முதல் அப்பெண் குழந்தை ஜுவான் மற்றும் அவரது துணைவியாரோடு இருந்து வருவதாக போலீஸார் கூறியுள்ளனர்.

குழந்தையை விற்ற வெரோனிகாவின் கணவர் தனது குழந்தை கடத்தப்பட்டதாக அளித்த புகாரை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமாக குழந்தையை விலைக்கு வாங்கியதாக அரசு தரப்பு ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதை தொடர்ந்து குழந்தையை வாங்கிய ஜுவானுக்கு 2 ஆண்டு தண்டனை கிடைக்கவுள்ளது.

English summary
Sili man bought a baby through internet which was only 2 days born when the time of sold in the year 2013. Court planned to give 2 years jail for him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X