நிர்மலா சீதாராமன் இங்கிட்டு வந்த உடனே யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்த சீனா..’ உளவு பார்க்க’ முகாம் ரெடி!
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பிய உடனே சீனா அங்கு சேட்டையை ஆரம்பித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான திருகோணமலை, யாழ்ப்பாணம் சென்றார். திருகோணமலையில் வங்கி கிளையை திறந்து வைத்தார். திருக்கோணேஸ்வரம் கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலிலும் நிர்மலா சீதாராமன் தரிசனம் செய்தார். யாழ்ப்பாணத்தில் மத்திய அரசு கட்டி கொடுத்த கலாசார மையத்தையும் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

கொழும்பில் நிர்மலா சீதாராமன்: இதனைத் தொடர்ந்து கொழும்பில் நடைபெற்ற மலையகம் 200 நிகழ்வுகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில்தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை ஒளிபரப்பு செய்யவில்லை என்கிற சர்ச்சையும் வெடித்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி உள்ளார்.

சீனா தூதர் குழு: இந்நிலையில் இலங்கைக்கான சீனா தூதர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழு திடீரென யாழ்ப்பாணத்துக்கு சென்றது. யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவில் தமிழர்களுக்கு உலர் உணவு மூட்டைகளை சீனா தூதர் குழு வழங்கியது. அத்துடன் யாழ்ப்பாணம் மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கும் வீடுகள் கட்டவும் நிதி உதவியையும் சீனா தூதர் குழு வழங்கியது.

யாழ்ப்பாணத்தில் சீனா: பின்னர் யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தையும் சீனா தூதர் குழு பார்வையிட்டது. இந்த பழைய கச்சேரி கட்டிடத்தை சீனாவுக்கு விற்பனை செய்ய இலங்கை ஏற்கனவே திட்டமிட்டிருந்ததாக சர்ச்சை வெடித்தது. பின்னர் இந்த விவகாரம் அடங்கிப் போனது. தற்போது திடீரென அதே பழைய கச்சேரி கட்டிடத்தை சீனா தூதர் தலைமையிலான குழு பார்வையிட்டிருக்கிறது. இதனால் இந்த பழைய கச்சேரி கட்டிடத்தை சீனா விலைக்கு வாங்குவது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவை உளவு பார்க்க உதவி: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒரு கட்டிடத்தை சீனா விலைக்கு வாங்கி முகாமிடுவது என்பது இந்தியாவை உளவு பார்க்கக் கூடிய ஒரு நடவடிக்கைதான் என்பது அரசியல் பார்வையாளர்களின் விமர்சனம். இந்தியாவிடம் இருந்து பெருமளவு நிதி உதவி பெற்றுக் கொள்ளும் இலங்கை அரசாங்கம், இந்தியாவின் தென்முனையில் சீனாவுக்கு வாசலை திறந்துவிட துணிந்திருப்பது பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பதும் அரசியல் விமர்சகர்கள் கருத்து.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications