இதுக்கு பேருதான் திருடனுக்கு தேள் கொட்டுறது.. பாவம் அப்ரண்டீஸ் போல.. அதான் வெவரமில்லாம சிக்கிட்டாரு!
பீஜியிங்: சீனாவில் ஏடிஎம் கொள்ளையர் ஒருவர் எச்சரிக்கை ஒலியை கேட்டு பதறிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்துள்ளது இந்த கொள்ளை முயற்சி சம்பவம். தற்போது வைரலாகியுள்ள வீடியோவில், ஏடிஎம் அறைக்குள் ஒரு நபர் நுழைகிறார். அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை பார்க்கும் வேளையில் கதவு தானாக சாத்திக் கொள்கிறது.

இதையடுத்து அங்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. இதனால் பதற்றம் அடையும் அந்த நபர் கீழே கிடக்கும் ஒரு தகரத்தை எடுத்து கதவை உடைக்க முயல்கிறார். பின்னர் அதே தகரத்தை வைத்து ஏடிஎம் எந்திரத்தை உடைக்க பார்க்கிறார். அதுவும் நடக்காததால் வெறுத்து போகிறார் அவர்.
ஷாங்காய் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்கின்றனர். சம்பந்தப்பட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications