சீனாவில் குலைநடுங்க வைக்கும் கொரோனா உயிரிழப்பு.. 2 ஆயிரத்தை தாண்டியது!
Recommended Video
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 136 பேர் கொரானா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பு வெளியே தெரிய குறைந்தது 15 நாட்கள் ஆகும் என்பதுடன், அந்த வைரஸை கண்டுபிடிக்கவே 15 நாட்கள் ஆகும்.
இதன் காரணமாக யார் யார் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் கோவிட் 19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

தாமதம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எவ்வளவோ முயற்சிகளை சீன அரசு மேற்கொண்டாலும் ஆரம்பத்தில் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டது. இது மூச்சுக்காற்றில் பரவும் என்ற விஷயமும், இது வெளியில் தெரியாமல் உடனே பலருக்கும் பரவும் என்ற விஷயமும் தாமதமாகவே சீனாவுக்கு தெரியவந்தது.

எப்படி பரவியது
அதன்பிறகு போர்க்கால நடவடிக்கை எடுத்த போதிலும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், என சங்கலி தொடர்போல் வேகமாக பரவியது. சந்திர புத்தாண்டு விடுமுறையில் மொத்தமாக மக்கள் பயணித்த போது தான் பாதிப்பு அதிகமாக ஆரம்பித்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருமினர். அது பலருக்கும் பரவி விட்டது

விலங்கில் இருந்து
சீனாவின் வுனானில் இருந்துதான் இந்த வைரஸ் முதல் முதலாக பரவியதாக தகவல் வெளியானது. அதுவும் இறைச்சி கூடத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சீனா சொல்கிறது. வுகான் நகரமே இப்போது மரண பீதியில் உள்ளது. பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நான்கில் ஒருவர் உடல் நிலை மோசடைந்து பாதிக்கப்படுகிறார்.அதில் சிலர் உயிரிழக்கிறார்கள். இப்படி உயிரிப்போர் மட்டும் ஒரு நாளைக்கு 100ஐ தாண்டுகிறது.

74184 பேருக்கு பாதிப்பு
இந்நிலையில் சீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதன்கிழமை நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2004 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள். கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1749 ஆக உள்ளது. ஹுபே மாகாணத்தில் மட்டும் 1693 பேர் பாதிக்கப்பட்டுள்ர்கள். ஒட்டுமொத்தமாக சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உயர்ந்துள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications